எதிர்க்கட்சியினர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் – பிரதமர் மோடி .

மோடி

டிசம்பர் 15

கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கம், தமது தலைமையிலான மத்திய அரசுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here