சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27-ம் தேதி நிறைவுபெறுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல், லேசான காய்ச்சல், இருமல் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.